Friday 28 January 2011

கீழே கொட்டிக் கிடந்த கவிதை வரிகள்


இது

மௌனம்
தூங்கும் நேரம்

வானத்தின்
விஸ்வரூபத்தில்- பூக்கள்
நட்சத்திரங்களோடு
மலர்ந்துக் கிடந்தன

அந்த ஏகாந்த
இரவின் குளிர்ச்சியில்
பனித்துகள்கள் போர்வைக்குள் 
ஒடுங்கிக்கிடந்தன

கைகளுக்குள்
சிறைப்பட்ட
முழு நிலவில்
மலைகளும்
பள்ளத்தாக்குகளும் -என்
கைகளுக்குள்
அடைப்பட்டுக் கிடந்தன!

தென்றலுக்கு
வியர்த்த நொடியில்
எனது கரங்கள்
அன்னிச்சையாய்
கை குட்டையைப்
பற்றின...

ஒற்றியெடுத்த
வியர்வைத் துளியில்
'நீர்' வெள்ளமாய்
'சூல்' கொண்டிருந்தது.

இரவு
எந்தவித
வெளிச்சமுமின்றி
இருட்டில்
தவித்துக் கிடந்தது!

எனது ஒற்றை
மெழுகுவர்த்தியின்- ஒளியில்
சந்திரன் -பால்
வெண்மையாய் பிரகாசித்தது.

நீண்டு கிடந்த
வெட்டவெளியில்- பாதை
வளைந்து நெளிந்து
தனிமையில்
பிரயாணம்  செய்தது...

குளிர் நிறைந்த
குளத்தில்மீன்கள்
மூச்சையடக்கி
 நீச்சல் பழகின...

பகலில்
குளிர்தாங்காமல்
'தீ 'மூட்டி
குளிர்காய்ந்த சூரியன்

வெதுவெதுப்பான
தடாகத்தில் -தன்
ஆடைகளைந்து
வெப்பம் -தீர
குளித்து எழுந்தது.

முன்னுக்கு பின்னாய்
முரன்பட்ட கவிதை வரியில்

எனது
எழுத்துக்கள்
காகிதத்தை - கிழித்து
கீழே சிதறி கிடக்கின்றன...

முடிந்தால்
கண்களால்
அள்ளிக்கொள்ளுங்கள். 

6 comments:

வருணன் said...

கவிவரிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பரந்து பரவசமூட்டும் மின்மினிகள் போல... சில கற்பனைகள் மிக அழகு. ஆனால் சொற்சிக்கனம் இன்னும் கொஞ்சம் இருந்திருக்கலாமோ என்பது எனது எண்ணம்.
நல்ல முயற்சி. வாழ்த்துக்கள் சகோ.

-தோழன் மபா, தமிழன் வீதி said...

நன்றி வருணன். இது சற்றே பெரிய கவிதை, கொஞ்சம் வித்தியாசமான முயற்சி. பிரபஞ்சத்தில் அடைபடாத இந்த கவிதை சொற்சிக்கனத்திலும் சிக்குவதில்லை.

Pranavam Ravikumar said...

I am here for the first time. Good post..! My wishes!

-தோழன் மபா, தமிழன் வீதி said...
This comment has been removed by the author.
-தோழன் மபா, தமிழன் வீதி said...

நன்றி பிரணவம் ரவிக்குமார் கொச்சுரவி
தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும்.

-தோழன் மபா, தமிழன் வீதி said...

சமுத்ரா தங்களது வாழ்த்திற்கு நன்றி!