கா த ல்
ஆற்றையும் ஆற்றை ஒட்டியுள்ள
மண்ணையும்,
மண்ணில் எழும்பியிருக்கும்
அரசையும்,
அரசை நிர்மாணித்த
அரசனையும்,
அரசனை மேற்பார்வையிடும்
பேரரசையும்,
பேரரசில் குடியிருக்கும்
குடிகளையும்,
அசைக்கும் ஆற்றல் உடையது.
மிக நீண்டதொரு
இரவு
அதன்
வெளிச்சங்கள்
இருட்டினுல் அமிழ்ந்து
அழுகையை வெளியிட்டன...
இரவின் யாருமற்ற
தெருவெளியில்
குப்பைத் தொட்டிக்கருகில்
அழுகிய பிணங்களாய்
கடிதங்கள்
சிதறிக் கிடக்கின்றன.
தனிமையின்
இருக்கத்தின்...
சுவர்களெங்கும்
இரத்தச் சிதறல்கள்
எழுத்துகளாய்
சிதறியிருக்கின்றன
காடா விளக்கின்
வெளிச்சத்தில்-இம்முறை
அவன் வெளியே
நின்றிருந்தான்
அவன்
வருவதற்குள்...
கைமணிக்கட்டின்
வழிவந்த
குருதி...
இம்முறை
அவன் கால்களை
நனைக்கட்டும்.
காற்றின் அலைதலில்
பிணவாடை
இன்று
அதிகம்தான்.
-தோழன் மபா