Sunday 14 April 2013

தையா...? சித்திரையா...?



தையா...?
சித்திரையா...?
இன்னும் குழப்பம் தீரவில்லை

தெளிவில்லாத தீர்வால்
தாமறை இலை
தண்ணீராய் இருக்கிறது மனது.

கொண்டாடவும் முடியவில்லை.
குதுகளிக்கவும் வழியில்லை.

எது
சரியென்று
யார்தான் 'சரியாகச்'
சொல்வாரோ...?!

பாரம்பரியமும்
பரிதவிப்பும்
கொண்டதா-எம்
தமிழினம்?

வந்தோரெல்லாம்
தலையில் கை வைக்க
தமிழ் என்ன
தகப்பன் இல்லாத
பிள்ளையா...?


ஆட்சி மாறினால்
வருடப் பிறப்பும் மாறுமா...?
உனக்கு தை
எனக்கு சித்திரையென்று....?

தமிழன் என்ன
எடுப்பார் கைபிள்ளையா...?

என்ன
பிறப்படா நாம்...?

இவர்களிடம்
சிக்கிக்கொண்டோம்
சிந்திக்கத் தெரியாமல்
சிக்கிக்கொண்டோம்.

தையா...?
சித்திரையா...?

எது
சரியென்று
யார்தான் 'சரியாகச்'
சொல்வாரோ...?!

-தோழன் மபா.
14/04/2013.

Wednesday 3 April 2013

ஆதலினால்....காதலை ரத்து செய்வோம்!



 1
னக்காக -என்
உயிரைக் கூடத்
தருகிறேன்.

அதற்காக -என்
மானத்தை
விலை பேசாதே....?!

வேண்டுமானால்

நம்
காதலை
ரத்து செய்துக்கொள்வோம்!.


-தோழன் மபா.
என் கல்லூரி காலத்தில் நான் எழுதிய கவிதைகள். (1992-1995)