Saturday 27 March 2010

தருணங்கள்

    !!!!!கவிதை!!!!!
    • வந்து வந்து
      போகுதடி
      வாய்க்கும் தருணமெல்லாம்,

      அந்திஎல்லாம்
      காத்திருந்தேன்
      ஆவல்
      வடிவாக இருந்தேன்,


      நீ
      சொன்ன
      மாலையும் கடந்து
      நாடு நீசியும்
      வந்ததடி,


      காத்திருக்கும்
      வேலையில
      காலாற - நான்
      நடக்க...

      பார்த்தேனடி -உன்
      உருவை
      படகின் மறைவினிலே...

      மறைவில் -நின்று
      என் தவிப்பை - நீ
      ரசிக்க...

      'ஓ...'

      இதுவும் - ஒரு
      காதல் விளையாட்டோ....?

    -தோழன் மபா










    Sunday 7 March 2010

    பிடிக்கலயோ...?!

    வாசகர்களே "தோழன் மபா கவிதைகள்" வலைப் பதிவில் இனி பிறரது கவிதைகளும் இடம் பெறும்.

    ஆதரவிற்கு நன்றி!
    -தோழன் மபா



    பிடிக்கலயோ...?!





    உன் தேகத்தினால் என்னை - தீண்டினாய்
    உன் சந்தேகத்தினால் என்னுள்- தீயை மூட்டினாய்
    உன் விவேகத்தினால் என்னை -வீழ்த்தினாய்
    உன் அழகினால் என்னை - கிறங்கடித்தாய்
    உன் மவுனத்தினால் என்னை- பேசவைத்தாய்
    உன் ஓரப் பார்வையினால் - என்னுள்
    ஓராயிரம் மின்னல்கள் தோன்றவைத்தாய்
    பிறகு ஏன் உன் அப்பனிடம் சொல்லி
    என்னை உதைக்க வைத்தாய்?!


    -ரவி கல்யாண்.
    மயிலாடுதுறை.

    Saturday 6 March 2010

    காவியுடை கபடதாரி



    சாமியென்பான் பூதமென்பான்
    சன்னிதானத்தில் - வைத்து
    சல்லாபம் செய்வான்.


    ஆசி வழங்குவான் அறிவுறை சொல்லுவான்
    பக்தன் சொத்தை -குறிவைத்து
    அவன் மனைவிக்கு காய் நகர்த்துவான்.


    மங்கையென்பான் மதுகுடிப்பான்
    மறைவிடத்தில் -வைத்து மாமிசம் தின்பான்
    பென்ஸ் காரில் பவனிவந்து பணத்தில் புரளுவான்.


    லிங்கம் எடுப்பான், காற்றில் கை வைத்து தங்கம் தருவான்,
    தன்னை நாடி வரும் பக்தன் வீட்டில் - சூனியமென்று
    அவனுக்கே கொல்லி வைப்பான்.


    இடத்தை வளைப்பான் மடத்தை போடுவான்
    பணம் உள்ளவனாய் -பார்த்து பல்லக்கு ஏறுவான்
    காவியில் வலம் வந்து கயமை செய்வான்.


    கட்டிவைத்து அடித்தாலும்
    காரி உமிழ்ந்தாலும்-காலிலியிருப்பதை
    கழட்டி அடித்தாலும் கயவனின் நிறம் மாறாது
    கபடதாரியின் வேடம் கலையாது.


    மக்கள் சொன்னாலும் திருந்தாது பட்டாலும் வருந்தாது
    ஆட்டுமந்தை கூட்டமிது - அறிவு வளரா மந்தையிது
    பகுத்தாய்ந்து பாராமல் பிறர் சொல் கேளாமல்
    தனி மனிதனை வணங்கும் காட்டுமிராண்டிக் கூட்டமிது.

    -தோழன் மபா