கட்டறுந்து
கிடக்கிறது
வாழ்க்கை.
வீதியெங்கும்
நினைவுகள்
காலடிச் சுவடுகளாய்
பதிந்து கிடக்கிறது.
காற்று
வீசும்போதெல்லம்
கண்ணில்-நீர்
துளிர்க்கிறது.
கை கோர்த்து...
முகம் பார்த்து...
நெருங்கி நடந்து...
அருகில் அமர்ந்து...
பிரயாணிக்கும்
போது....
மட்டு மீறி
செல்கிறது
நட்பு!
காலங்கள்
திசைகொன்றாய்
பிரிபடும் போது...
மெல்ல
புரிகிறது...
நட்பு
நட்பாய்
மட்டும்
தொடர்வதில்லை!.
-தோழன் மபா