Wednesday 2 March 2011

மங்கையர் மலரில் எனது கவிதை!


'மங்கையர் மலர்' மாத இதழ் மார்ச் 8  பெண்கள் தினத்தை முன்னிட்டு  'சக்தி சுடர் 64 ' என்ற சிறிய  இணைப்பை வெளியிட்டுள்ளது.



பெண்மையை போற்றுவோம் என்கிற கருத்தில் கிட்டத்தட்ட் 64  கவிதைகள் இந்த இணைப்பில் இடம்பெற்றுள்ளன. இதில் எனது கவிதையும் 'சுரபி' எனற தலைப்பில் வெளிவந்துள்ளது.

இத் தொகுப்பில் பாரதியாரின் தெய்வமன்றோ? கவிதையும், புரட்சிக் கவிஞன் பாரதிதாசனின் 'பெண்குழந்தை தாலாட்டில்'வரும் 'துலங்கும் பெருமாட்டி'  என்ற கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

இத் தொகுப்பில் எனது  கவிதையும்   வெளிவந்துள்ளது.  

 'என்னே... நான் பெற்ற பேரு. அவர்கள் எங்கே....நான் எங்கே....? ' நெஞ்சம் நிமிர்ந்து கவிதையில்  தஞ்சம் கொள்கிறது, தமிழின்பால்...!  

இதில் கவிஞர்  தாமரைகவிஞர்  கலாப்ரியா,   வேலு சரவணன் (நாடகக் கலைஞன்),   நெய்வேலி பாரதிக்குமார்,   சோழ நாகராஜன் பத்திரிகையாளர்,    பாலபாரதி,ச ம  உ.,    பிச்சினிக்காடு இளங்கோ,    எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி,    ராஜாசந்திரசேகர்,   கவிஞர்  நந்தலாலா,   ச.விஜயலட்சுமி, நடிகர் மன்சூர் அலிகான், நடிகர் ஸ்ரீகாந்த்,   அஜயன் பாலா இயக்குனர் - எழுத்தாளர்,   கண்ணா -ஓவியர்,    நன்மாறன் ச ம  உ.,    பாஸ்கி நிகழ்ச்சி தொகுப்பாளர்,    சாரு பிரபா  சுந்தர்,    அண்ணா கண்ணன் கவிஞர் -பத்திரிகையாளர்,    இராம .குருநாதன்,   சுதீர் செந்தில் உயிரெழுத்து இதழ்,    நாஞ்சில் பி.சி.அன்பழகன் இயக்குனர்,    ரத்திகா,   கவிஞர்  பாக்கியம் சங்கர்,  கீதா பிரேம்குமார் தொழிலதிபர், கவிஞர்  திலகபாமாகவிஞர்  தி.ந.கிருபானந்தன்,     சொர்ணபாரதி கல்வெட்டு பேசுகிறது,  சுப்ரபாரதி மணியன் கனவு இதழ்,  தோழன் மபா,     ஏ.ஏ.ஹெச்  கோரி,    பாலு சத்யா,   இயக்குனர் தாண்டவக்கோன்கவிஞர் அன்பாதவன், கவிஞர் கபிலன்,   கொற்றவன்,   ஜெயகுமாரி  தணிகாசலம்,. ஓவியக்கவிஞர் அமுதபாரதி, ஆரூர் புதியவன்நடிகை ஊர்வசி, ஏர்வாடி எஸ். ராதாக்ருஷ்ணன், சக்திஜோதி, 'மேகலை' ராஜேஸ்வரிஅனிதாகுமார்,  சீதா ரவி,  அம்சப்ரியா, பிரளயன் -நாடக ஆசிரியர்,  சமூண்டிச்வரி, எழுத்தாளர் வே.எழிலரசு, ஆதலையூர் சூரியகுமார், வானவன், உமா ஷக்தி, கவிஞர்  இளம்பிறைகவிஞர் மு.முருகேஷ், மதுமிதா, முனைவர் அரங்கமல்லிகா,  லக்ஷ்மி மோகன் சமுக சேவகி, ஸ்ரீ நிவாச ராகவன் போன்ற பெருபான்மையான கவிஞர்கள் இதில் கவிதை புனைந்துள்ளனர்.

கவிதையையும் கவித்துவ உரையையும் சேர்த்துக் கட்டிய மாலையாக 'பெண்மையின் மேன்மையைச்' சொல்லும் அருந்தொகுப்பாக இத் தொகுப் 'பூ'   மலர்ந்துள்ளது.

இக் கவிதைத் தொகுப்பை மிக நேர்த்தியாக தொகுத்துள்ளார் கவிஞரும் இனையாசிரியருமான அமிர்தம் சூர்யா, அவர்களுக்கு  எனது இதையபூர்வமான நன்றிகள் பல...!