Saturday 6 March 2010

காவியுடை கபடதாரி



சாமியென்பான் பூதமென்பான்
சன்னிதானத்தில் - வைத்து
சல்லாபம் செய்வான்.


ஆசி வழங்குவான் அறிவுறை சொல்லுவான்
பக்தன் சொத்தை -குறிவைத்து
அவன் மனைவிக்கு காய் நகர்த்துவான்.


மங்கையென்பான் மதுகுடிப்பான்
மறைவிடத்தில் -வைத்து மாமிசம் தின்பான்
பென்ஸ் காரில் பவனிவந்து பணத்தில் புரளுவான்.


லிங்கம் எடுப்பான், காற்றில் கை வைத்து தங்கம் தருவான்,
தன்னை நாடி வரும் பக்தன் வீட்டில் - சூனியமென்று
அவனுக்கே கொல்லி வைப்பான்.


இடத்தை வளைப்பான் மடத்தை போடுவான்
பணம் உள்ளவனாய் -பார்த்து பல்லக்கு ஏறுவான்
காவியில் வலம் வந்து கயமை செய்வான்.


கட்டிவைத்து அடித்தாலும்
காரி உமிழ்ந்தாலும்-காலிலியிருப்பதை
கழட்டி அடித்தாலும் கயவனின் நிறம் மாறாது
கபடதாரியின் வேடம் கலையாது.


மக்கள் சொன்னாலும் திருந்தாது பட்டாலும் வருந்தாது
ஆட்டுமந்தை கூட்டமிது - அறிவு வளரா மந்தையிது
பகுத்தாய்ந்து பாராமல் பிறர் சொல் கேளாமல்
தனி மனிதனை வணங்கும் காட்டுமிராண்டிக் கூட்டமிது.

-தோழன் மபா

2 comments:

மதுரை சரவணன் said...

கொல்லி வைப்பான். அருமை வரிகள். வாழ்த்துக்கள்.

-தோழன் மபா, தமிழன் வீதி said...

தங்கள் ஆதரவிற்கு நன்றி!