Wednesday 24 February 2010

நீக்ரோ!

1994 வாக்கில் அமெரிக்காவில் கருப்பர்களுக்கெதிராக ஒரு பெரும் கலவரம் வெடித்தது. கருப்பின நீக்ரோக்கள் ஆங்காங்கே வீதிகளில் கொலுத்தப்பட்டனர் உடல் கிழிக்கப்பட்டனர். நான் கல்லூரியில் படித்து கொண்டு இருந்த போது, கறுப்பர்கள் மீதான் தாக்குதல் உட்சத்தில் இருந்தது. அந்த நேரத்தில் நான் எழுதிய கவிதை 'இளந்துதில்' வெளிவந்து பலரின் பாராட்டையும் பெற்றது.
அமெரிக்காவில் தற்போது ஒரு வரலாற்று மாற்றம் நிகழந்து இருக்கிறது . பரக் ஒபாமாவை அதிபராக தேர்ந்தெடுத்து உள்ளனர் அந்நாட்டு மக்கள். இது ஒருநாளில் நிகழ்ந்தது அல்ல. ஆப்ரகாம் லிங்கன் முதல் மால்கம் எக்ஸ் வரை தங்களது உயிரை தந்து கருப்பர்கள் சுய மரியாதையுடன் வாழ, ஒரு புதிய பாதையை போட்டு சென்றுள்ளனர். அந்த பாதை இன்று கருப்பர்களை அமெரிக்க அதிபராக வருமளவிற்கு உயர்த்தியுள்ளது.

அமெரிக்காவில் கறுப்பர்கள் மீதான தாக்குதல் என்பது உலகம் அறிந்த ஒன்று. அதையெல்லாம் சகித்தஅவர்கள் அமெரிக்காவிற்கு பல துறைகளில் வெற்றியை பெற்று தந்துள்ளனர். தேச பற்று மிகுந்த அவர்கள் மீது வெள்ளையர்களின் வன்கொடுமை பல வழிகளிலும் அவர்கள வாழ்வை நசுக்கியது. விளையாட்டு துறையில் அமெரிக்க பெரும் பல தங்க பதக்கங்களுக்கு கறுப்பர்களின் அந்த போராட்ட குணம் தன் காரணம் என்றால் மிகையல்ல.


தமிழன்வீதியில் வந்ததை தோழன் மபா கவிதைக்காக மீள் பிரசுரம் செய்கிறேன்.



நீக்ரோ !

என்
சகோதரனே-நீ
புறக்கனிக்கப்படுகிறாய்
அதுவே !
உன்னில் எனக்கொரு
நேசிப்பை ஏற்படுத்தியது!

உன் அடிமைத்தனமும்
இந்தியர்களின் அடிமைத்தனமும்
பிரிட்டீஷ் சாம்ராஜ்ஜியத்தில்
பேர் போனது,

நீயும் - ஏன்
என்று கேட்க மாட்டாய்
நானும் - எதற்கு
என்று - வினவ மாட்டேன்.

என் நேசிப்பும்
அப்படியே....

உன் கருப்பு தசைகளில்
திசை எதுவாய் இருந்தால் - என்ன?

நீ
பெரும்
பதக்கமும் - புகழும்
அமெரிக்கர்களுக்கு
வேண்டும்.

பின்னர்
சான்பிரன்சிஸ்கோவில்
அவ்வப்போது
கொளுத்தப்படுவாய்
முதுகில் குத்தப்படுவாய்.

மண்ணில் மாண்புகளை
ஏற்படுத்திய-நீ
மனதில் மரணித்துபோவாய்,
நீயும் மனிதன்தானே....!

உலகஅரங்கில் -உன்
இடத்திற்கு - நீ
போராடும்போது - நான்
தவித்திருக்கிறேன்,
என்னால்
உதவமுடியவில்லையே...என்று.

ஆமாம் சகோதரனே !

கறுப்புத் தோல்
எங்களுக்கோர் அங்கி
உனக்கு அதுவே
போர்க்கொடி!


உன்னை
நேசிக்கின்றேன் - என்
ஆப்ரிக்க சகோதரனே

நான்
இந்தியன் என்பதால்.

- தோழன் மபா

No comments: