Wednesday 10 February 2010

முன்பு போலவே...


















மழை பெய்யும்-இந்த
இரவில்
வானம் இருண்டு
குளிருடன் கிடக்கிறது.

மின்னல் வெட்டும்
அகால வேளையில்
உணர்வுகள்
ஒற்றையடிப் பாதையில்
வெளிச்சமிட்டுக் கிடக்கின்றன...

ஊதல் காற்றின்
தாலாட்டில் -இருவர்
உடலும் சிலிர்த்து
உலகின்
மறு கூட்டலுக்கு
தயாரானது,

அசைந்தெரியும்
வெளிச்சத்தில்
முகங்களும் கைகளும்
உயிர்களுக்குள்
துழாவின...

அடித்து பெய்த
மழையில்
படுக்கை;
உணர்வுகளுக்குள்
அமிழ்ந்தே கிடந்தது.

எதன் பொருட்டும்
இருந்திராத
முன்மாதிரியில்




மீண்டும் - ஓர்
இரவு

செப்பனிடப்படாமல்
முன்பு போலவே...
கலைந்தே
கிடந்தது.

2 comments:

அண்ணாமலையான் said...

கலக்கலா இருக்கு

-தோழன் மபா, தமிழன் வீதி said...

நன்றி
தங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும்.