Thursday 23 December 2010

ஒரு பகல் நேரத்தில்...

!!!!!கவிதை!!!!!!


நான் எழுதிய இக் கவிதை தினமணி கதிரில் (22/04/2001) அன்று வெளிவந்தது.

நீ
வந்து
சென்றதற்கான
அடையாளம் எதுவும்
இல்லையென்றுதான்
நினைத்திருந்தேன்.


பார்வையும்
அப்படித்தான்
சொன்னது.


மேஜையில்
இருந்த
பூச்-ஜாடியும்
அப்படியே
இருந்தது.


கொடியில்
காயவைத்த
*அவளது துணியிலும்
வித்யாசம் இல்லை.


டம்ளரில்
இருந்த
பாலுக்கும்
சேதமில்லை.


இருந்தும்
கண்டு பிடித்துவிட்டேன்,


அட!
போக்கிரி
சிட்டுக்குருவியே...


அரிசியை
இப்படியா
இறைத்துவிட்டு
செல்வது...?

-தோழன் மபா

*நான் முதலில் எழுதிய கவிதையில் 'துணியிலும் வித்யாசம் இல்லை ' என்று எழுதிஇருந்தேன், இப்போது துணிக்கு முன்பாக 'அவளது' என்ற வார்த்தையை சேர்த்து எழுதி உள்ளேன்.

4 comments:

சிவகுமாரன் said...

கட்டி இழுக்குது கவிதை-அந்த
சிட்டுக் குருவியைப் போலே

G.M Balasubramaniam said...

என்றெழுதியதானால் என்ன.?நல்ல கவிதைக்கு மூப்பு கிடையாது. மிகவும் நன்றாக உள்ளது. ரசித்தேன் வாழ்த்துக்கள்

-தோழன் மபா, தமிழன் வீதி said...

@ Sivakumar

தட்டி கொடுக்குது உங்கள் கருத்து... கட்டிக் கரும்பை போலே.
நன்றி!

-தோழன் மபா, தமிழன் வீதி said...

@G.M Balasubramaniam

நன்றி அய்யா, தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும்.