Friday 23 August 2013

பசியடங்கா மனிதன்!





   நீ
நேற்றுவரை
துள்ளித் திரிந்திருப்பாய்.

ஓடி
விளையாடியிருப்பாய்.

மிட்டாய்க்காக
முகம் மலர்ந்திருப்பாய்.

இன்றுன்னை
கொன்றதாரென்று
அறிந்திருப்பாயா....?

ரசாயனக் குண்றென்றார்
விஷவாயுவென்றார்.
அரசு ராணுவமென்றார்
கிளர்ச்சியாளர் கூட்டமென்றார்

கொன்றது
எப்படியாயினும்
யாராகினும்
கொல்லப்பட்டது
நீதானே....?

மனிதன் தின்ற
மழலைகள்
மாமிசம்
என்றேன் 
நான்.

இன்னும்
பசியடங்கா
மனிதன் -இருந்தால்
வரலாம்
சிரியாவுக்கு!

-தோழன் மபா.

சிரியா  டாமஸ்கசில் அரசு ராணுவத்தினரால் விஷ வாயு குண்டு வீசிக் கொல்லப்பட்ட மழலைகள். இத் தாக்குதலில் சுமார் 1000 பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர். விடியற்காலையில் இத் தாக்குதல் நடந்துள்ளதால் எல்லோரும் படுக்கையிலே பிணமாயினர்.

No comments: